உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் கட்சிகாரியாலம் திறப்பு!!

முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ்மக்கள் கூட்டணியின் கட்சி காரியாலம் வவுனியா மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் திறந்துவைக்கபட்டது.
காலை 9 மணிக்கு வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோவிலில் விசேட வழிபாடுகளை மேற்கொண்ட சி.வி. விக்கினேஷ்வரன் மன்னார் வீதி வழியாக இளைஞர்களால் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டிருந்து கட்சி அலுவலகத்தினை திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் பாராளு மன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, கட்சியின் யாழ் ,வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களான அருந்தவபாலன், சிறி, மற்றும் இளைஞர்கள்  கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க