உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சமூக ஊடகங்களின் தாக்கம் தொடர்பான கருத்தமர்வு

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கான கருத்தமர்வு ஒன்று இன்று (10.08) காலை வவுனியா மில்வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கான சமூக ஊடகங்கள் பற்றிய தெழிவூட்டல், அதன் பாதுகாப்பு, ஊடக மற்றும் தகவல் அறிவினை மேம்படுத்தல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கொழும்பில் இருந்து வருகைதந்த வளவாளர்கள் செயலமர்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க