உள்நாட்டு செய்திகள்புதியவை

நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி சம்பத் அபேகோன்

உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் 2019/2020 ஆம் ஆண்டுக்கான உயர்நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக இன்று (ஆகஸ்ட் 10) அதன் ஆண்டு பொதுக் கூட்டத்தில் நியமிக்கப்பட்டார்.

சங்கத்தின் பொதுக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.யூ.பி. கறலியத்த மற்றும் செயலாளர் மஞ்சுலா திலகரத்ன தலைமையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

அவர்களில் சஷி மகேந்திரன் -துணைத் தலைவர், ஆதித்யா படபெண்டிகே – செயலாளர், சுஜீவ நிஷங்க – உதவி செயலாளர், முஹம்மத் இர்ஷாதீன் – பொருளாளர், மற்றும் நவரத்னா மரசிங்க- ஆசிரியர் ஆக நியமிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், 10 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு விசேட குழுவும் இதன்போது நியமிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க