உள்நாட்டு செய்திகள்புதியவை

சீன சுற்றுலாப்பயணி கடலில் மூழ்கி உயிரிழப்பு!

மாத்தறை கடலில் மூழ்கி சீன சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஒரு பெண் எனவும் மாத்தறை, மடிஹ எனும் பகுதியில் நீராட சென்ற போது கடலில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் அப்பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கி இருந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் அருகிலுள்ள பொது மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிசிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க