உள்நாட்டு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

புதிய தலைவரை தேர்வு செய்ய காங்கிரஸ் செயற்குழு டெல்லியில் கூடியது.

காங்கிரஸின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் செயற்குழு இன்று டெல்லியில் கூடியது.

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழுவின் கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் தொடங்கியது,

கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் , வேணுகோபால், ஏ.கே. அந்தோணி, குலாம் நபி ஆசாத், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

நேற்று சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முகுல் வாஸ்னிக், சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜூன கார்கே, ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் உள்ளிட்டோரின் பெயர்களை மூத்த தலைவர்கள் கட்சியின் தலைவர் பதவிக்காக பரிந்துரைத்துள்ளனர்.

மன்மோகன்சிங் அல்லது பிரியங்கா தலைமை ஏற்க வேண்டும் என்றும் சிலர் கோரி வருகின்றனர். இன்றைய செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க