விளையாட்டு செய்திகள்

பறிபோகிறது ஆஷ்லி பார்டியின் முதலிட மகுடம்

பிரான்ஸ் திறந்த டென்னிஸ் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்ற அவுஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி கடந்த 8 வாரங்களாக உலக டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதலிடத்தில் இடத்தில் இருந்து வருகிறார்.

டோரண்டோவில் நடந்து வரும் கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் நேரடியாக 2-வது சுற்று ஆட்டத்தில் களம் கண்ட ஆஷ்லி பார்டி 7-6 (7-5), 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சோபியா கெனினிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் ஆஷ்லி பார்டியின் முதலிட மகுடம் பறிபோகிறது.

இதேவேளை இதேபோட்டியில் 3-வது சுற்றுக்கு முன்னேறி இருக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அல்லது செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஆகியோரில் ஒருவர் முதலிடத்துக்கான அரியணையை அலங்கரிக்க உள்ளனர்.

புதிய தரவரிசை அடுத்த வாரத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.

கருத்து தெரிவிக்க