உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘இலங்கை பயங்கரவாதிகள் பிலிப்பைன்ஸில் உள்ளனர்’

இலங்கையை சேர்ந்த இரு பயங்கரவாதிகள் பிலிப்பைன்சிற்குள் இருப்பதாக என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மனிலா சர்வதேச விமானநிலை அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.

இருவரும் தற்கொலை குண்டுதாரிகள் என அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரினது குடும்பத்தவர்களும் பிலிப்பைன்சில் வாழ்கின்றனர் எனவும் இவர்களில் ஒருவர் பெண் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் மார்க் கெவின் சம்கூன் என்ற பயங்கரவாதி இலங்கையின் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்சில் உள்ள பயங்கரவாதிகளுக்கு குண்டுதயாரிப்பது மற்றும் தாக்குவது உள்ளிட்ட பயிற்சிகளை வழங்குவதற்காக குறித்த பயங்கரவாதிகள் பிலிப்பைன்சிற்குள் ஊடுருவியுள்ளனர் என பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை மற்றொரு பெண்மணியும் பிலிப்பைன்சிற்குள் இருப்பதாகவும் அவர் இலங்கை பிலிப்பைன்ஸ் கடவுச்சீட்டுகளை கொண்டவர் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க