உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பாரவூர்தி விபத்து; இருவர் காயம்!

மட்டகளப்பு ஏறாவூர் பகுதகயிலிருந்து லிந்துலை பகுதிக்கு 15 தொன் கஜூ விதைகள் ஏற்றி சென்ற கனரக பாரவூர்தி ஒன்றே அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார்லிபேக் எனும் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரண்டு பேர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து [09.08.2019]  இன்று காலை இடம்பெற்றுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.

பாரவூர்தியின் தடுப்பு கட்டை இயங்காமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், கனரக வாகனத்தின் சாரதியும், உதவியாளரும் தப்பியதன் காரணமாக இருவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க