உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மலர்கிறது கூட்டணி- சஜித்தின் கோரிக்கையை ஏற்றார் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன்படி கூட்டணிக்கான யாப்பு விரைவில் இறுதிப்படுத்தப்படும் என்றும், சஜித் தரப்பால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகளை பிரதமர் ஏற்றுள்ளார் என்றும் அரசியல் தரப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.

ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் இம்மாத இறுதிக்குள் உதயமாகவுள்ள கூட்டணியில் பல சிறு கட்சிகளும், சிவில் அமைப்புகளும் அங்கம் வகிக்கவுள்ளன.

கடந்த 5 ஆம் திகதி கூட்டணி மலரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் யாப்பு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையால் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

 

 

கருத்து தெரிவிக்க