உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பேருக்கு விடுதலை

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சரியான முறையில் சாட்சிகள் இல்லை என நிரந்தர நீதாய நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி சம்பத் அபேகோன் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு விசாரணை மேற்கொள்ள முடியாது என்பதனால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றம் சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் குறித்த நிதி மோசடி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க