உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘மீரிகம மக்களிடம் சுகாதார அமைச்சு முன்வைத்துள்ள அவசர வேண்டுகோள்’

மீரிகமவில் உள்ள பாதுராகொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்துவந்த விஷ சாராயத்தினை அருந்திய நபர்கள் மேலும் இருப்பார்களாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே, விஷ சாராயம் அருந்தி மீரிகம – பதுரகொட பகுதியில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க