உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

நாளை அவசரமாக கூடுகிறது ஐ.தே.க.!

ஐக்கிய தேசியக் விசேட கூட்டமொன்று கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (09) காலை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கும், ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும், புதிய அரசியல் கூட்டணி குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படலாம் என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

 

கருத்து தெரிவிக்க