உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஆஸ்பிரின் உள்ளிட்ட ஒவ்வாமை எதிர்ப்பு வலி நிவாரணி மருந்துகளை காய்ச்சலுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், சில டெங்குக் காய்ச்சல் நோயாளர்களின் குறிப்பிட்ட சில மருந்துவகைகளைப் பயன்படுத்திய காரணத்தினால் அவர்களது உடல்நிலை மோசமடைந்துள்ளதுடன், அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

காய்ச்சல் ஏற்பட்டுள்ளவர்கள், அஸ்பிரின், புருபன், டைக்கிலோபெனாக், சோடியம், மெபனமிக் அசிட் மற்றும் இந்த வகையினைச் சேரந்த ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் ஸ்ரிரொயிட் வகையினைச் சேர்ந்த மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள், காய்ச்சல் தொற்றுள்ளவர்களுக்கு இந்த மருத்துகளை பரிந்துரைக்காது தவிர்க்க வேண்டும்.

அத்துடன், காய்ச்சலுக்காக தாங்கள் பயன்படுத்தும் மருந்துகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க