உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்காகி 72 வயது பெண் உயிரிழப்பு

சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா முறை கொண்ட ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கத்தியால் குத்தியவர் 16 வயது மாணவன் என்று பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி முள்ளியான் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது.

சம்பவத்தில் சுப்ரமணியம் கங்கேஸ்வரி (வயது -72) என்பவரே கொல்லப்பட்டார்.

மூத்த சகோதரரை கத்தியால் குத்துவதற்கு இளைய சகோதரன் முயன்ற போது கத்தி குறித்த மூதாட்டியின் நெஞ்சில் பாய்ந்தது.

இந்நிலையில் அவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அவரின் உயிர் வழியில் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் 16 வயதுடைய மாணவனைக் கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கருத்து தெரிவிக்க