உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘3 ஆயிரம் கிலோகிராம் நிறமூட்டப்பட்ட அரிசி மாத்தறையில் மீட்பு’

3 ஆயிரம் கிலோகிராம் நிறமூட்டப்பட்ட அரிசி மாத்தறை, முலட்டியன பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நிறமூட்டப்பட்ட சிவப்பு பச்சை அரிசி தொகை மாத்தறை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே கைப்பற்றப்பட்டுள்ளன.

வெள்ளை பச்சை அரிசிக்கு சிவப்பு நிற நிறமூட்டியை பயன்படுத்தி நிறமூட்டப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நிறமூட்டப்பட்ட அரிசி காத்தான்குடி மற்றும் கல்முனை பகுதியில் தயாரிக்கப்பட்டதெனவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டார்.

பெலியத்த பகுதியை சேர்ந்த மொத்த வர்த்தகரொருவரே குறித்த அரிசி தொகையினை வைத்திருந்ததாக தெரியவருகிறது.

வெள்ளை பச்சை அரிசியினை சிவப்பு பச்சை அரிசியாக மாற்றுவதற்கு நிறமூட்டும் செயற்பாடுகள் மேலும் இடம்பெறுகின்றதா என்பது குறித்து விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாறான மோசடி நடவடிக்கை தொடர்பில் பொதுமக்களும் தகவல் வழங்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

அரிசி தொகையினை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க