உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘குளவி கொட்டுக்கு இலக்காகி 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி’

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெரோ தோட்டத்தில்  குளவி கொட்டுக்கு இலக்காகி 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை தேயிலை மலைக்கு வேலைக்கு சென்று கொழுந்து பறித்துக்கொண்டிருந்த சமயம் மரத்திலிருந்த குளவிக்கூடு திடிரென கலைந்ததில் அருகில் வேலைச்செய்த பலர் குளவித்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கொத்மலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க