உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தி விபத்து!

லிந்துலை வோல்ரிம் பகுதியில் பாரவூர்தி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் இருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாரவூர்தியானது டயகம  பகுதியிலிருந்து ஒரு தொகையான தேயிலை தூள்களை ஏற்றிவந்த பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான பாரவூர்தியானது தேயிலையை ஏற்றி வரும் போது தலவாக்கலை பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடும் போது பள்ளத்தில் சாய்ந்துள்ளது.

குறித்த பாரவூர்தியில் இருந்த இருவர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க