உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜமிலா மில்லியா அமைப்பின் இரண்டு பேர் கைது

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஒருவர் ஜமிலா மில்லியா இஸ்லாமியா அமைப்பின் கிழக்கு மாகாண தலைவராவார்.

மற்றும் ஒருவர் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவராவார் என்றும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாணவர் பயங்கரவாதம் தொடர்பில் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் இவர்கள் இருவரும் எங்கு கைதுசெய்யப்பட்டார்கள் என்ற விபரம் வெளியாகவில்லை.

கருத்து தெரிவிக்க