உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாண ஆளுநர் பதவி துறப்பு!

மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன,  தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பான கடிதத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு இன்று அவர் அனுப்பிவைத்துள்ளார் என தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளராக இருந்த மைத்ரி குணரத்ன, கட்சி தலைவருடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஐ.தே.கவுடனான தொடர்புகளை துண்டித்துக்கொண்டார்.

இதையடுத்தே அவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.

ஊவா மாகாண ஆளுநரும் அண்மையில் பதவி துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க