உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘வவுனியாவில் உள்ளது 5ஜி கோபுரம் எனில் அகற்றப்படும்’

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரம் 5ஜி கோபுரம் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அக்கோபுரம் உடனடியாக அகற்றப்படும் என வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர்ப்பகுதிகளான பண்டாரிக்குளம், திருநாவற்குளம் ஆகிய பகுதிகளில் 5ஜி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

5ஜி கோபுர வலையமைப்பினால் உடல், உள ரீதியான பாதிப்புக்கள் ஏற்படவாய்ப்புக்கள் அதிகளவில் காணப் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கப்படும் நிலையில் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கோபுரங்களை அகற்றிவிடுமாறு அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க