உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

 படுகொலையின் 30  ஆண்டு நினைவேந்தல்!

வல்வெட்டித்துறை படுகொலையின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தல் இன்றுவெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை நகரில்இவ் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதன் போது பொதுச் சடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்படவல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 1989ஆம் ஆண்டு இந்திய இராணவத்தினரினால் ஆடி அமாவாசை விரததித்தன்று மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் 72 பொதுமக்கள்சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அந்த படுகொலையின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தலே இன்றையதினம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க