உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன

6 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு அரச தொழில்வாய்ப்புக்களை பெற்று கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமன கடிதங்கள் பல்வேறு பகுதிகளிலும் வழங்கி வைக்கப்பட்டன.

689 அபிவிருத்தி உதியாளர்களுக்கான நியமன கடிதங்கள் களுத்துறை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

பா.உ லக்ஷ்மன் விஜயமான உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

பட்டதாரிகளுக்கு அரச தொழில்வழக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் நியமன கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

218 பட்டதாரிகள் இதன்போது நியமன கடிதங்களை பெற்று கொண்டனர்.

அம்பாரை மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு பிரதியமைச்சர் அனோமா கமகே தலைமையில் இடம்பெற்றது.

ஹாடி உயர் தொழில்நுட்ப நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 631 பேருக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், எஸ்.எம். மொஹமட் இஸ்மாயில் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க