உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தாய்,மகன் கொலை ; சந்தேகநபர் கைது!

கிளிநொச்சி இரட்டைப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

ஜயந்திநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை தாய் மற்றும் மகனின் சடலங்கள் மீட்கப்பட்டன.

திங்கட் கிழமை இரவு இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இக்கொலை தொடர்பில் முக்கிய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த வீட்டின் கிணற்றில் போடப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி மற்றும் இரும்புக் கம்பி என்பன கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க