உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இந்திய மீனவர்கள் ;சிறைச்சாலைக்கு சென்ற பெண் பிரதிநிதிகள்!

மன்னார் கடற்பரப்பில் எல்லை மீறி வந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை, வவுனியா உள்ளுராட்சி மன்றங்களின் பெண் பிரதிநதிகள் சிலர் இன்று சந்தித்துள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்களை சந்தித்து அவர்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

வவுனியாவில் உள்ளுராட்சி மன்றங்களில் 25 பிரதிநிதிகள் உள்ள நிலையில் அவர்களின் சார்பில் 3 பேர் இன்று இச் சந்திப்பில் கலந்துகொண்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

கருத்து தெரிவிக்க