உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கு மின் விளக்கு பொருத்தும் நடவடிக்கை!

வவுனியா ஓமந்தை, மருதமடு கிராமத்திலுள்ள கொந்தக்காரங்குளம் பகுதியிலுள்ள வீதிகளுக்கு வீதி விபத்தைத்தடுப்பதற்காக மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை தமிழ் தெற்கு பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் கொந்தக்காரன்குளம் பகுதியிலுள்ள 5 வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி கோகிலகுமார் அஞ்சலாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் இரவு வேளைகளில் போக்குவரத்து மேற்கொள்ளும் மக்கள் வீதி விபத்துக்களுக்கு முகம் கொடுத்து வருவதையிட்டு மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை தமிழ் தெற்கு பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க