உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அம்பாறை பகுதியில் கைகுண்டுகள் மீட்பு; சிறுவர்கள் உயிர் தப்பியது’

அம்பாறை- சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி நாவிதன்வெளி வாவிக்கு அருகாமையிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட கைக்குண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று புதன்கிழமை பொலித்தீன் பையில் சுற்றப்பட்டிருந்த கைக்குண்டுகளை எடுத்து சிறுவர்கள் விளையாடியுள்ளனர். இதை அவதானித்த பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பாக சவளக்கடை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினருக்கும் இந்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மீட்கப்பட்ட கைக்குண்டுகளை பாதுகாப்பாக செயலிழக்க செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சவளக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க