உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘செங்கலடி பகுதியில் இருந்து பெண் குழந்தை ஒன்று மீட்பு’

மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் இருந்து பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

மீராவோடை மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயுடன் செங்கலடியிலுள்ள தனியார் வங்கிக்கு சென்ற வேளை, வங்கிக்கு அருகில் பெண் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டெடுத்துள்ளார்.

குறித்த குழந்தையை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ​நேற்று (31) மாலை 6 மணி அளவில் ஒப்படைத்துள்ளார்.

இக்குழந்தை 4 நாட்கள் மதிக்கத்தக்கதாகவும், 2970 கிராம் எடையுள்ளதாகவும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க