உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

5 மில்லியன் ரூபா செலவில் முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்திற்கு ‘சிறுவர் பூங்கா’

கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்திற்கான சிறுவர் பூங்கா, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் சிபாரிசுக்கு அமைவாக 0.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கபபடவுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலை கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பாடசாலையாக காணப்படுவதுடன், பல்வேறுபட்ட தேவைகளைக்கொண்ட பாடசாலையாகவும் காணப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பாடசாலையின் அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகம், சிறிதரன் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அவைமாக, சிறிதரன் அவர்களின் சிபாரிசுக்கு அமைவாக மேற்படி பாடசாலைக்கான சிறுவர் பூங்கா அமைப்பதற்கென நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த பூங்கா அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க