உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கேரளா கஞ்சா பொதிகள் கடற்படையினரால் மீட்பு !

யாழ்ப்பாணத்தின் மாதகல் துறை பகுதியில் கடற்படையினர் தேடுதல் நடத்தியத்திய போது, நேற்று (31) 122.5 கிலோ கேரள கஞ்சா அடங்கிய பொதிகளை மீட்டுள்ளனர்.

குறித்த பொதிகள், கடற்கரைக்கு அருகில் ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

கேரள கஞ்சா தொகை கடல் வழி வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா தொகை குறித்து இளவலை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடற்படை தொடர்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க