உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகும் சபீதா பெரேரா!

பிரபல நடிகை சபீதா பெரேரா, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று (01) அழைக்கப்பட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள கட்டடம் ஒன்றை வாடகை அடிப்படையில் விவசாய அமைச்சுக்குப் பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த கட்டடம் குத்தகைக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் நிதி மோசடி இடம்பெற்றதாக ஏற்கனவே முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், கட்டடத்தின் உரிமையாளர் தரப்பிலேயே சபீதா இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

குறித்த கட்டடம் 21 மில்லியன் ரூபா மாத வாடகைக்கு விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்ட ஆவணத்தில் உரிமையாளர் தரப்பில் சபீதா பெரேரா கையெழுத்திட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க