உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யாழில் 5G கோபுரம்: எதிர்ப்பு மனு ஒத்திவைப்பு

யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிவரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

யாழ் நவாந்துறை வடக்கைச் சேர்ந்த செல்லப்பர் பத்மநாதன் குறித்த மனுவை கடந்த வாரம் சமர்பித்தார்.

இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

மனுதாரரின் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மன்றில் முன்னிலையானார். யாழ் மாநகர சபை, மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர முதல்வர் சார்பில் சட்டத்தரணி இராஜரட்ணம் முன்னிலையானார்.

மனுதாரரின் சட்டத்தரணி மன்றில் இடைக்காலக் கட்டளை கோரி சமர்ப்பணம் செய்தார். எதிர்மனுதாரர்கள் மூவர் சாா்பில் முன்னிலையான சட்டத்தரணியும் சமர்ப்பணம் செய்தார்.

எனினும் நான்காவது எதிர்மனுதாரரான இடொக்கோ (Edotco Services Lanka (pvt)LTD ) நிறுவனம் சார்பில் எவரும் முன்னிலையாகததால் இடைக்காலக் கட்டளை தொடர்பான விண்ணப்பத்தை மன்று ஆராய்வதை ஒத்திவைத்தது.

அத்துடன், நான்காவது பிரதிவாதிக்கு மன்றின் ஊடாக அறிவித்தல் வழங்க மனுதாரருக்கும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சபையின் முடிவுக்கு மாறாக எந்தவித ஆய்வும் இன்றி மாநகர முதல்வர், தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் கம்பங்களை நடுவதற்கு உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளார்.

தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைப்பது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் திட்டமிடல் குழு ஒன்றை நியமிக்கவேண்டும். அந்தத் திட்டமிடல் குழு தீர்மானங்களை எடுக்கவேண்டும். இவை இந்த விடயத்தில் மீறப்பட்டுள்ளன.

எனவே சட்டவிரோத கோபுரங்களை தொடர்ந்தும் அமைக்கக் கூடாது என தடைவிதிக்க பட வேண்டும்.

மேலும் Edotco Services Lanka (pvt)LTD நிறுவனத்தால் அமைக்கப்படும் கோபுரங்களில் 5ஜி தொழிநுட்பத்தைப் பொருத்த Edotco Services Lanka (pvt)LTD நிறுவனம் அனுமதி வழங்கக் கூடாது.

Edotco Services Lanka (pvt)LTD நிறுவனம் இதுவரை அமைத்த கோபுரங்களை அகற்ற படுவதற்கான கட்டளை

மாநகர முதல்வருக்கும் Edotco Services Lanka (pvt)LTD நிறுவனத்துக்கும் இடையிலான உடன்படிக்கையை இடைநிறுத்தி வைப்பதற்கான இடைக்காலக் கட்டளை.

Edotco Services Lanka (pvt)LTD நிறுவனத்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் சட்டவிரோத கோபுரங்களை தொடர்ந்தும் அமைப்பதை இடைநிறுத்த இடைக்காலக் கட்டளை.

Edotco Services Lanka (pvt)LTD நிறுவனத்தால் அமைக்கப்படும் கோபுரங்களில் 5ஜி தொழிநுட்பத்தைப் பொருத்த Edotco Services Lanka (pvt)LTD நிறுவனம் அனுமதி வழங்குவதை இடைநிறுத்தும் இடைக்காலக் கட்டளை உள்ளிட்ட நிவாரங்களை மனுதாரர் மனுவில் கோரியுள்ளார்.

கருத்து தெரிவிக்க