உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாணந்துறை பகுதியில் ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, நல்லுருவ பகுதியில் நேற்றிரவு (30) குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பாணந்துறை தெற்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றை சோதனை செய்தபோது, அதில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு மதுபானப் போத்தல் 50 இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிலியந்தலையை சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து மதுபானப் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரை, எதிர்வரும் 02 ஆம் திகதி பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவித்து, அவரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க