உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பிள்ளையான் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திகாந்தனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28 திகதிவரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மேல் நீpதிமன்ற நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் உத்தரவிட்டார்.

கடந்த 2005.12.25ம் திகதி அன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக பிள்ளையான் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகளின் சுகயீனம் காரணமாக 28.10.2019 வரை விளக்க மறியில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க