உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தின் முதலாவது கட்டம் தங்காலையில் ஆரம்பம்!

‘அனைவருக்கும் நிழல்’ தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தின் முதலாவது கட்டம் தங்காலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டை அண்மிக்கும் போது அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தங்காலை வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

30 வீடுகளைக் கொண்ட இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு 103 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க