உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வ/கனராயன்குளம் ஆரம்ப வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்து வைப்பு!

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட  வ/கனராயன்குளம் ஆரம்ப வித்தியாலயத்தில் மன்னகுளத்தை சேர்ந்த  இராசரத்தினம் கோகிலேஸ்வரனின் ஞாபாகர்த்தமாக திறன் வகுப்பறை (Smart class) நேற்று [ 30.07.2019 ] திறந்துவைக்கப்பட்டது.

குறித்த வகுப்பறை இராயரட்ணம் மணோன்மணி அவா்களால் திறந்துவைக்கப்பட்டதுடன், பாடசாலைக்கான 13 கண்காணிப்பு கமராக்களும் பாடசாலை அதிபாிடம் கையளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் திரு செ.பாலகிருஸ்ணன் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன்,வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், கோகிலேஸ்வரனின் குடும்பத்தினா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் திறன் வகுப்பறை அமைப்பதற்கான நிதி உதவியை லண்டனை சேர்ந்த அமரர் இராசரத்தினம் கோகிலேஸ்வரனின் சகோதரன் திரு இராசரத்தினம் சுதாகரன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக்கு உதவிபுாிந்த இராசரத்தினம் குடும்பத்தினருக்கு(சுதாகரனுக்கும்) பாடசாலை சமூகம்  நன்றியை தொிவித்துக் கொண்டனா்.

கருத்து தெரிவிக்க