உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க சட்டத்தில் இடமில்லை.

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும் என்று சிலர் கூறுவதை நடைமுறைப்படுத்தமுடியாது.

எந்த சட்டத்தைக்கொண்டும் அதனை செயற்படுத்தமுடியாது என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

எந்த சட்டத்தின்கீழும் மட்டக்களப்பு கெம்பஸ் பிரைவேட் லிமிடெட்டின் சொத்துக்களை அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது.

மாறாக, இந்த பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுத்த தாம் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உபவேந்தர் ஒருவரையும் புரிந்துணர்வின் அடிப்படையில் நியமிக்கமுடியும் என்று ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க