உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவ தேர்த்திருவிழா நிகழ்வு!

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவானது [22.07.2019 ] அன்று கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகி, ஆலய பிரதம குரு சௌந்தராஜ குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

தொடர்ந்து 8 நாட்கள் தினமும் முலவர் பூஜை யாக தம்ப பூஜை அபிசேகம் ஆகியவை இடம்பெற்று சுவாமி உள்வீதி வெளிவீதி வலம்வருதல் இடம்பெற்றன.

செவ்வாய்க்கிழமை (30) காலை 9 ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா காலை முலமூர்த்திக்கு விஷேட பூஜைகள் இடம்பெற்றதை தொடர்ந்து மாமாங்கேஸ்வரர் பெருமான் தேரிலே ஏழந்தருளி அடியார்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்தார்.

தேரடி பெருமானுக்கு விஷேட பூஜைகள் இடம் பெற்று சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு தேர்வடம் அடியார்களுக்கு வழங்கப்பட்டு ஆலய பிரதம குருக்களின் வழிநடத்தலின் கீழ் வடம் பிடித்தால் வாழ்வு சிறக்கும் எனும் கருப்பொருளுக்கமைவாக அடியார்களின் அரோகரா கோசத்துடன் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

தொடர்ந்து 10 நாள் புதன்கிழமை (31) இவ்உற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தோற்சவமானது நண்பகல் ஆலயதீர்த்த கேணியில் நடைபெறவுள்ளது. இதன்போது ஆடி அமாவாசை பிதிர்கடன் நிறைவேற்றும் நிகழ்வுகளும் இடம்பெறும்.

இந்நிலையில் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் உற்சவத்திற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்து தெரிவிக்க