உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மட்டு.மாவட்டத்தில் வரட்சி காரணமாக 9 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக ஒன்தாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தல் கடந்த சில மாதங்களாக கடுமையான வரட்சி நிலவி வருகின்றது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்திலுள்ள நீர் நிலைகள் முற்றாக வற்றியுள்ளமையால் விவசாய செய்கையும் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.இதனால் விவசாயிகள் தமது வாழ்வாதாராத்தை இழந்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை வாகரை வெல்லாவெளி கிரான் வவுணதீவு உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது.

வரட்சி காரணமாக கால் நடைகளும் மேய்ச்சல் தரையின்றி அவதியுறுவதையும் அவதானிக்க முடிகின்றது.

கருத்து தெரிவிக்க