உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் நேரம் மாற்றம்!

அமைச்சரவைக் கூட்டத்தின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் காலங்களில் காலை 7.30 மணியளவில் நடைபெறும் என்று அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதுவரை காலம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைகளில் காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தினை காலை 7.30க்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவு தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை முன்வைக்கவுள்ளார்.

கருத்து தெரிவிக்க