உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

முன்னோடிப் பரீட்சைகள் அனைத்தையும் இன்றுடன் நிறைவு!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள் அனைத்தையும் இன்று (30) நள்ளிரவுடன் நிறைவுசெய்ய வேண்டும் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைய பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

அதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்தும் இன்று நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளன.

அதற்கு பின்னர் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் நடாத்தப்படும் பட்சத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க