உள்நாட்டு செய்திகள்புதியவை

ஏடிஎம் மூலம் கொள்ளை: ரோமானியருக்கு விளக்கமறியல்

போலி கடன் அட்டைகளைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து ரூ .2.5 மில்லியனை பெற்ற ரோமன் நாட்டைச் சேர்ந்தவரை ஓகஸ்ட் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் வங்கியால் முறைப்பாடு அளிக்கப்பட்டதையடுத்து, குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அர்வான் அன்றெய் டேனியல் போலி அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட பல பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க