உள்நாட்டு செய்திகள்புதியவை

துன்புறுத்தலினால் குவைத் பணியாளர்கள் குழு நாடு திரும்பியது

57 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் அடங்கிய குழு இன்று (ஜூலை 29) குவைத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளது.

துன்புறுத்தல், வீடு உரிமையாளர்களால் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் ஊதியம் வழங்கப்படாமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர்கள் வெளியேறியுள்ளனர்.

தங்கள் முதலாளிகளின் தவறாக நடந்து கொண்டதாக அந்நாட்டின் இலங்கை தூதரகத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து அவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

விசாரணையை நடத்திய பின்னர் தற்காலிக கடவைசீட்டில் குழுவை குவைத் காவல்துறையினர் திருப்பி அனுப்பியிருந்தனர்.

கருத்து தெரிவிக்க