உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெரிவுக்குழுவிற்கு அழைக்க திட்டம்

நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் எதிர்வரும் 6 திகதி கூடவுள்ளதாக அதன் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த தினத்தில் சட்டம் மற்றும் ஒழுங்குகள் துறை அமைச்சர்களாக பதவி வகித்த சாகல ரத்னநாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அமைச்சர் ருவான் விஜேவர்த்தன ஆகியோருக்கு  சாட்சியம் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஆகியோரையும் தெரிவுக்குழுவுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தெரிவுக்குழுவில் முன்னிலையாக தயாராக இருப்பதாக பிரதமரும் தெரிவுக்குழுவுவில் முன்னிலையாக முடியாதென ஜனாதிபதியும் தெரிவித்த நிலையில் அவர்களுக்கு எந்தவிதமான அழைப்பும் விடுக்கப்படவில்லை என தெரிவுக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க