உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

வடமாகாணத்தில் 1990 சுகசரிய சேவை நிறைவு விழா

1990 சுகசரிய அவசர உயிர் காக்கும் சேவை வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட நிறைவை முன்னிட்டு இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நிகவுகள் இடம்பெற்றது.

இலங்கையில் 1990 சுகசரிய அவசர உயிர் காக்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருட கால நிறைவை அடைந்துள்ளதுடன் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஒருவருட நிறைவை அடைந்துள்ளது.

இந்நிகழ்வில் குறித்த சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அவசர பிரிவு முகாமைத்துவ அதிகாரி ப.ஜெசிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 3 மாவட்டத்தை சேர்ந்த சுகசரிய அவசர உயிர் காக்கும் சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க