உள்நாட்டு செய்திகள்புதியவை

மோதலினால் மொனராகலையில் ஒருவர் உயிரிழப்பு

மொனராகலையில் நேற்று (ஜூலை 26) இடம்பெற்ற மோதலின் போது நபர் ஒருவர் மர கட்டையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

திருமண விழாவின் போது குடிபோதையில் இருவர் கைக்கலப்பில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கடல்பேத்த பகுதியை சேர்ந்த 42 வயதான அஜித் நிஷாந்த, என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரைத் தாக்கிய நபர் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

கருத்து தெரிவிக்க