உள்நாட்டு செய்திகள்புதியவை

இறுதிவரை மகனைக் காணாது விடை பெற்ற தாய்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க நடாத்தப்படுகின்ற அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்த தாயொருவர் மாரடைப்பு காரணமாக கடந்த 24 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

மன்னார் பகுதியில் கடற்படையிடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை பத்து வருட காலத்துக்கும் மேலாக குறித்த தாய் தேடி வந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஏற்கனவே தனது இரண்டு மகன்களை பறிகொடுத்து நான்காவது மகனாக குறித்த காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் மகனைத் தேடி இவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த செபமாலை திரேசம்பாள் ஆவார்.

இவருடைய இறுதி அஞ்சலி நிகழ்வுகள் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

தற்போது அவரது உடலம் இரணைப்பாலை கிறிஸ்தவ தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து உடலம் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

கருத்து தெரிவிக்க