உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐ. தே. கவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களாக மூவர் அறிவிப்பு

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய அல்லது சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தெரிவு செய்வார் என ஐக்கிய தேசிய கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பிரதமரை நிறுத்த விரும்பும் ஒரு குழுவும் மற்றும் கரு ஜெயசூரியவையும் சஜித் பிரேமதாசவையும் ஆதரிக்கும் குழுக்களும் ஐ.தே.கவில் உள்ளன என கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தனே கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்களுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சி  தனது ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சி  அதன் கூட்டணி பங்காளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க