உள்நாட்டு செய்திகள்புதியவை

பிரதமர் ரணில் இந்திய கோவில்களில் விசேட ஹோம வழிபாடு

இந்திய சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிமசிங்க மற்றும் அவரது மனைவி கர்நாடகவில் உள்ள மூகாம்பிகை கோயிலில் நவ சாந்தி ஹோமத்தை மேற்கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

விசேட வழிபாடுகள் நிமித்தம் , பக்தர்களுக்கு கோயிலுக்குள் செல்ல காலை முதல் பிற்பகல் வரை தடை விதிக்கப்பட்டிருந்தது என கூறப்பட்டுள்ளது.

இதன் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து மங்களூருக்கு சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை இன்று கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்திலுள்ள கோயிலில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு, மாலை இலங்கைக்கு திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க