உள்நாட்டு செய்திகள்புதியவை

முச்சக்கர வண்டியில் பயணித்தவர் விபத்தில் உயிரிழப்பு

களுத்துறை, நாகஸ்ஹந்திய தொடருந்து கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் பயணித்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு வெலிகொட பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து பெலியத்தவுக்கு பயணித்த தொடரூந்தில் முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியும் முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றுமொரு நபரும் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபப்ட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க