உள்நாட்டு செய்திகள்

குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர் மீது விசாரணை

குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டார தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குருநாகல் வைத்தியர் மொஹமட் ஷாபி தொடர்பாக வைத்தியர்களின் வாக்குமூலங்களைப் பெற சென்ற போது சி. ஐ.டி அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் மேற்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சொத்துகுவிப்பு உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருநாகல் வைத்தியர் மொஹமட் ஷாபி தொடர்பில் 3 விசேட வைத்தியர்களின் வாக்கு மூலங்களைப் பெற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தனர்.

இதன் போது அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்ட நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றம், மீண்டும் வாக்குமூலங்களை பதிவு பெறுமாறு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க